ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று, ஒஸ்தியில் தன்னுடன் நடித்த ரிச்சாவுக்கு தடை போட்டுள்ளாராம் நடிகர் சிம்பு. "கோ" படத்தில் ஆரம்பித்த சிம்புவுக்கும், ஜீவாவுக்குமான பனிப்போர் இன்னும் முடிந்தபாடில்லை, நீடித்துக்கொண்டே போகிறது. "கோ" படம் எடுப்பதற்கு முன்னர், சிம்புவைத்தான் அணுகியுள்ளார் டைரக்டர், ஆனால் சிம்பு நடிக்க மறுக்க, பின்னர் ஜீவாவை நடிக்க வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். படமும் மாபெரும் ஹிட்டானதால் பலரும் ஏன் நடிக்கவில்லை என்று சிம்புவிடம் ஆதங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிம்பு என்னுடைய நண்பரே இல்லை என்று ஜீவா கூறினார். இதனையடுத்து சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் மோதல் தீவிரமானது. இந்நிலையில் ஜீவாவுடன் ஜோடி சேர இருந்த ரிச்சாவை, சிம்பு தடுத்துவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
தமிழில் தனுஷ் உடன் "மயக்கம் என்ன", சிம்புவுடன் "ஒஸ்தி" படங்களில் நடித்து இருப்பவர் தெலுங்கு நடிகை ரிச்சா. இந்த இரண்டு படமும் இன்னும் ரிலீசாகவில்லை, ஆனால் ரிச்சாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்நிலையில் நடிகர் ஜெய்யை வைத்து "வாமணன்" படத்தை இயக்கிய அகமது, தனது புதுப்படத்தில் ஜீவாவுடன் நடிக்க, ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். ரிச்சாவும் சம்மதித்தாக தெரிகிறது. ஆனால் எத்தனை நாள் கால்ஷீட் என்பது மட்டும் முடிவாகமல் இருந்துள்ளது. ஹீரோயின் கிடைத்த மகிழ்ச்சியில் படத்திற்கான வேலையை துவங்கியிருக்கிறார் அகமது. இந்தநேரம் பார்த்து திடீரென, ஜீவாவுடன் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் ரிச்சா.
முதலில் நடிப்பதாக கூறி, இப்போது திடீரென விலகுவதாக ரிச்சா கூறியிருப்பது டைரக்டருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ரிச்சா, இப்படி சொல்ல காரணமே சிம்பு தான் என்றும், ஜீவாவுடன், ரிச்சாவை ஜோடி சேர விடாமல் தடுத்தது அவர் தான் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.