ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
குத்து ரம்யாவிற்கு பிறகு பெங்களூரில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிக்கி கல்ராணி அரை டஜன் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த இன்னொரு புதுவரவு நடிகையான ஷைனியும் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.
அந்த படங்கள் பற்றி அவர் கூறுகையில், விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்தில் நான் செகண்ட் லீடாக நடித்தேன். அதையடுத்து இப்போது மியாவ், வீரய்யன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
மேலும், இந்த படங்களில் வீரய்யனில் கிராமத்து கதையில் சிங்கிள் நாயகியாகவும், மியாவ் படத்தில் நகரத்து கதையில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராகவும் நடிக்கிறேன். இதில் மியாவ் படத்தில் ஓரளவு கிளாமராகவும் நடித்துள்ள நான் தொடர்ந்து கதைக்கு தேவையான அளவு கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறும் ஷைனி, கர்நாடகத்து பெண்ணாக இருந்தபோதும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது. அதனால் சென்னையில் முகாமிட்டு தொடர்ந்து புதிய படங்களுக்கான கதைகள் கேட்டு வருகிறேன் என்கிறார்.