ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வெறும் காமெடி மட்டுமே வேலைக்கு ஆகாது என்ற உண்மையை புரிந்து கொண்டிருக்கிறார் சந்தானம். அதனால் இனி நடிக்கும் படங்களில் காமெடியை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். முதல் கட்டமாக, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்க உள்ளார் சந்தானம்.
இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரெஜினா கேசன்டரா நடிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. தனது அடுத்த பட படத்தின் படப்பிடிப்பை துவங்க டிசம்பர் 1-ஆம் தேதி துவங்கவிருக்கிறார் செல்வராகவன்.
இந்த படத்தில் சந்தானம் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரியான யதார்த்தமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம். சந்தானம் நடிக்கும் படம் என்றாலே காமெடியாக இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதையும் தாண்டி இப்போது யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து களம் இறங்க உள்ளார். சந்தானத்தின் இந்த புதிய பாதையை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளபோகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.