'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் |
தினேசுடன் நடித்த அட்டகத்தி, சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் போன்ற படங்கள் நந்திதாவுக்கு கொடுத்த ஹிட்தான் அவரது கோலிவுட்டில் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன்பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களும் வெற்றி பெற்றன. அதனால் விஜய சேதுபதி, விஷ்ணு போன்ற வி எழுத்தில் பெயர்களைக்கொண்ட நடிகர்களின் படம் என்றாலே தனக்கு ராசிதான் என்று சினிமா விழாக்களில் உரக்க குரல் கொடுத்து வந்தார் நந்திதா.
ஆனால், இப்போது அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த அந்த வி நடிகர்கள் யாருமே நந்திதாவை கண்டுகொள்வதில்லையாம். சமீபத்தில் மேற்படி நடிகர்களின் புதிய படங்களில் நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் எதுவுமே ஒர்க்அவுட்டாகவில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களை அவர் அணுகியபோது, டைரக்டர்களை கைகாட்டி விட்டு நழுவிக்கொண்டார்களாம். இதனால் வி நடிகர்கள் தன்னை கழட்டி விட்டு விட்டதாக புலம்பும் நந்திதா, இப்போது தான் நடித்து வெளிவர தயாராகிக்கொண்டிருக்கும் உள்குத்து, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை அபிமான ஹீரோக்களைப்போன்று இந்த படங்களும் தன்னை கைவிட்டு விட்டால், ஐதராபாத்தில் அழுத்தமாக கால்பதித்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார் நந்திதா.