ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மும்பையில் நடந்த 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். இதையொட்டி ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் ரஜினியை வாழ்த்து கோஷம் எழுப்பியபடி வரவேற்றனர். பின்னர் ரஜினி அவர்களிடையே பேசும்போது... "2.ஓ படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவிற்காக மும்பை சென்றிருந்தேன். விழா சிறப்பாக நடந்தது நீங்களும் பார்த்திருப்பீங்க. விமான நிலையம் வரை வந்து என்னை வரவேற்றதற்கு நன்றி" என்று கூறிவிட்டு வேகமாக சென்றார்.
அவரை துரத்திய நிருபர்கள். 2.ஓ படம் எப்போது வெளிவரும்?, இடைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?, 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடைபற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழக முதல்வரை மீண்டும் சந்திக்க செல்வீர்களா? கருணாநிதியும் உடல் நலமில்லாமல் இருக்கிறாரே அவரையும் சந்திப்பீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார்கள். "2.ஓ போஸ்டர் பார்த்தீங்களா நல்லா இருந்திச்சா?" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் கிளம்பிச் சென்றார்.