ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தி சீரியல்களில் நடித்து விட்டு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. பின்னர், தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் அதையடுத்து தமிழில் லாவண்யா திரிபாதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிப்பதை தொடர்ந்த அவருக்கு சில படங்கள் வெற்றியை கொடுத்ததால் இப்போது அங்கே வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் லாவண்யா திரிபாதி.
இந்த நிலையில், மீண்டும் தமிழில் சி.வி.குமார் இயக்கி வரும் மாயவன் படத்தில் நடித்து வருகிறார் லாவண்யா திரிபாதி. சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரம்மன் படத்தை விடவும் அழுத்தமான நாயகியாக நடிக்கும் லாவண்யா திரிபாதி, இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே புதிய தமிழ்ப்படங்களில் கமிட்டாகி விட வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது இரண்டு புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார். அந்த டைரக்டர்கள் தமன்னா போன்று கிளாமராக நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, கதைக்கு தேவைப்பட்டால் கிளாமராக நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினாராம். ஆக, மாயவன் ஹிட்டடித்தால் தமிழில் லாவண்யா திரிபாதியின் கவுண்டவுன் ஸ்டார்ட்டாகி விடும் என்று தெரிகிறது.