ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அந்தக்காலத்தில் சினிமாக்கள் ஸ்டூடியோவுக்குள்ளேயே படமாக்கப்பட்டது. அவுட்டோரில் படப்பிப்பு நடப்பது அபூர்வமாக இருக்கும். அப்படி ஏதாவது நடந்தால் அது பரம ரகசியமாக இருக்கும். காரணம் அப்போது மக்கள் சினிமாவை உண்மை என்று நம்பிக் கொண்டு பார்த்தார்கள். சினிமா ரகசியம் தெரிந்து விட்டால் சினிமா மீதுள்ள மோகம் குறைந்து விடும் என்று கருதினார்கள்.
ஆனால் முதன்முறையாக சினிமா பற்றிய ரகசியங்களை போட்டு உடைத்த படம் சர்வர் சுந்தரம். இன்றைக்கு சினிமாவுக்குள் சினிமா கதை, சினிமா பற்றிய கதை என நிறைய வருகிறது. இதற்கு பிள்ளையார்சுழி போட்ட படம் சர்வர் சுந்தரம். சாதாரண ஓட்டல் சர்வராக இருந்து நடிகனாக உயரும் ஒருவனின் கதை. அந்த ஒருவனாக நாகேஷ் நடித்திருந்தார். நாகேஷ் சினிமாவில் நடிக்கும் காட்சிகள் அப்படியே படமாக்கப்பட்டிருந்தன. படப்பிடிப்பு காட்சிகள் காட்டப்பட்டன.
நாகேஷ் குதிரையில் வேகமாக பாட்டு பாடிக்கொண்டு வருவார். பின்னர்தான் அவர் பொம்மை குதிரையில் வருவதும் பின்னணியில் ஏற்கெனவே எடுக்கபட்ட அவுட்டோர் காட்சி திரையில் ஓடுவதும் தெரியும். இயக்குனர் எப்படி நடிப்பு சொல்லி கொடுக்கிறார். நடிகைகள் எப்படி நடிகத் தெரியாமல் சொதப்புகிறார்கள். மழை, காற்று எல்லாம் எப்படி வருகிறது. சண்டையில் எப்படி ஹீரோக்கள் டூப் போடுகிறார்கள் என்கிற ரகசியத்தையெல்லாம் போட்டு உடைத்தது படம்.
படம் வெளிவந்த பிறகு "இப்படி சினிமா ரகசியத்தை வெளியில் காட்டினால் இப்படித்தான் நம்மை ஏமாற்றகிறார்களா என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சினிமா பார்க்க வரமாட்டார்கள்" என்று பலர் விமர்சனம் செய்தார்கள். அதையெல்லாம் தாண்டி படம் மகத்தான வெற்றி பெற்றது. சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
1964ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. கே.பாலச்சந்தரின் நாடகத்தை கிருஷ்ணன்&பஞ்சு படமாக இயக்கினார்கள். நாகேஷ், கே.ஆர்.விஜயா, முத்துராமன் நடித்தார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தார்கள்.