ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மைனா, கும்கி என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் பிரபுசாலமன். என்றாலும் அதையடுத்து அவர் இயக்கிய கயல், தொடரி படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், அடுத்தபடியாக அவர் கும்கி-2 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கனவே சாட்டை என்ற படத்தை தயாரித்த பிரபுசாலமன், மீண்டும் அந்த படத்தை இயக்கிய அன்பழகனை வைத்து ரூபாய் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அவரது கயல் படத்தில் நடித்த சந்திரன், ஆனந்தி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
மேலும், பிரபுசாலமன் தயாரிப்பு என்பதோடு, சாட்டை இயக்குனரின் அடுத்த படைப்பு என்பதால் ரூபாய் படம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய பிரபுசாலமன், இதற்கு முன்பு எம்.அன்பழ கன் இயக்கத்தில் நான் தயாரித்த சாட்டை படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு, ஒன்னேகால் கோடிக்கு சாட்டிலைட் விற்பனை ஆனது. ஆனால், இந்த படம் இன்னும் விற்பனையாகவில்லை. அந்த அளவுக்கு சினிமா நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. அதனால் இனிமேல் நான் படம் தயாரிக்க மாட்டேன் என்றார்.