அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் சிவகுமாருக்கு இன்று 75வது பிறந்த நாள். இதையொட்டி அவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் லலித் கலா அகாடமியில் சிவகுமார் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. நேற்று சிவகுமாரின் ஓவியங்கள் அடங்கிய பெயிண்டிங்ஸ் ஆஃப் சிவகுமார் என்ற நூல் வெளியிடப்பட்டது. இதனை தமிழருவி மணியன் வெளியிட்டார். விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, வசந்த், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், பாடலாசிரியர் அறிவுதி, டாக்டர் சொக்கலிங்கம், அல்லையன்ஸ் ஸ்ரீநிவாசன், ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், தியாகு, நடிகை ரம்யா பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு, தயாரிப்பாளர் தனஞ்செயன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசியதாவது: அப்பாவிற்கு எப்போதும் பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம் ஆனால் அவர் பழநி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இந்த வருடம் அவருடைய 75வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் அவருக்கு மிகச்சிறப்பான பிறந்த நாள் ஆகும். இந்த நாளை நாங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் என்றும் நினைவிருக்கும் பிறந்தநாளாக மாற்ற வேண்டும் என்று யோசித்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம்.
கண்காட்சிக்கு இப்போது நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. கண்காட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்கள் கண்காட்சியை தொடர முடிவு செய்துள்ளோம்.இந்த காபி டேபிள் புத்தகம் மிக முக்கியமான புத்தகம் , இந்நாளை குறிக்க இந்த புத்தகத்தை இன்று வெளியிட்டு உள்ளோம். இராமாயணம் , மகாபாரததுக்கு பிறகு இப்போது திருக்குறளை பேச தயாராகி வருகிறார். இனி வருடம் தோறும் அப்பாவின் பிறந்த நாள் அன்று ஓவிய போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும். என்றார் சூர்யா.