ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திரிஷா கதையின் நாயகியாக நடித்த நாயகி படம் அவரை ஏமாற்றி விட்டது. அந்த படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்த திரிஷாவின் மேனேஜர் கிரிதர், கதையை சொன்ன மாதிரி படமாக்காமல் வேறு மாதிரியாக படமாக்கி விட்டாராம். அதனால் பர்ஸ்ட் காப்பி பார்த்து செம டென்சனாகி விட்டாராம் திரிஷா. அதன்காரணமாகத்தான் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தாராம்.
அதையடுத்து, தற்போது மாதேஷ் இயக்கியுள்ள மோகினி படத்தில் நடித்துள்ள திரிஷா, இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அவதார் கெட்டப்பில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, படத்தின் முதல்காப்பியை பார்த்த திரிஷா திருப்தியாக இருக்கிறாராம். இந்த படம் தனக்கு பெரிய வெற்றியாக அமையும் என்கிற உற்சாகத்தில் இருப்பவர், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளாராம்.
மேலும், திரிஷாவை மட்டுமே நம்பி சில கோடிகளை செலவு செய்து இந்த படத்தை இயக்கியிருக்கும் மாதேஷ்க்கும் ஒரு வெற்றி தேவைப்படுவதால் மோகினி படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அதனால் படத்தை வெளியிட ஸ்டுடியோ கிரீன் உள்ளிட்ட சில கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்