ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
வீரன் செல்வராசு இயக்கியுள்ள படம் வீரத்தேவன். மதுரை மண்வாசனைக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் புதுமுகங்கள் கெளசிக்- மீனலோசினி ஜோடி சேர்ந்துள்ளனர். தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 45 நாட்கள் மதுரையில் நடந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பரில் படம் திரைக்கு வருகிறது.
காதல் மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகன் கெளசிக், பட நாயகி மீனலோசினியுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு ரொம்ப தயங்கினாராம். இன்னும் சொல்லப்போனால் அவரை கட்டிப்பிடித்து நடிக்க வேண்டிய காட்சிகளில் பதறிப்போனாராம். அதனால் சில நாட்களாக அவர்களை ப்ரண்ட்லியாக பழகி விட்டு அதன்பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இதுபற்றி புதுமுக நாயகன் கெளசிக் கூறும்போது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான் என்பதால், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு பருத்தி வீரன், ஆடுகளம், மதயானைக்கூட்டம் போன்ற சில மதுரை சார்ந்த படங்களைப்பார்த்து என்னை ஓரளவு தயார்படுத்திக்கொண்டுதான் ஸ்பாட்டுக்கு சென்றேன். இந்த படத்தில் காதல் காட்சிகளில் நடித்தபோது நான் பயந்தது உண்மைதான். 22 வயசு பையன் நான். முதன்முதலாக ஒரு பெண்ணிடம் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்றதும் முதலில் தைரியமாக சென்றாலும், அவரை நெருங்கியதும் நடுக்கமாகி விட்டது. ஆனால் படிப்படியாக அது சரியாகி விட்டது என்று கூறும் கெளசிக், இது முதல் படம் என்பதால் அப்படியாகி விட் டது. ஆனால் இந்த படத்திற்கு பிறகு நடிக்கும் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடுவேன் என்கிறார்