ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த பாகுபலி படம் மிகப் பெரும் வசூல் படமாக அமைந்தது. முதல் பாகம் தயாரான போதே இரண்டாம் பாகத்தின் 40 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டதாக முதல் பாகத்தின் வெளியீட்டின் போதே ராஜமௌலி தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு கடைசியில் இரண்டாம் பாகத்தின் மீதிக் காட்சிகளைப் படமாக்கும் பணி ஆரம்பமானது. அன்றிலிருந்து இன்று வரை படம் பற்றிய பல்வேறு விதமான தகவல்கள், சர்ச்சைகள், குழப்பங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
படத்தில் புதிது புதிதாக சில நடிகர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும், அனுஷ்கா இன்னும் உடலை இளைக்க வைக்காததால் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும், படம் அடுத்த ஆண்டு மத்தியில்தான் வெளிவரும் என்றும் பலரும் பலவிதமான கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள். அவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க ராஜமௌலி முடிவெடுத்துள்ளாராம். அதனால் இன்று ஹைதராபாத்தில் தெலுங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பாகுபலி 2 படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலாவது உண்மையா அல்லது இதுவும் மற்றவர்களால் பரப்பி விடப்பட்டதா என்பதும் இன்று அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்ற பின்புதான் தெரிய வரும்.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான வியாபாரத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இரண்டாம் பாகத்தின் வியாபாரத்தில் மட்டுமே ராஜமௌலிக்கென அவருடைய பங்காக 100 கோடி ரூபாய் வரை அவருக்குக் கிடைக்கும் என்பதுதுன் டோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்.