ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் |
சூர்யா நடிப்பில் இயக்கிய அஞ்சான் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சண்டக்கோழி-2 படத்தை லிங்குசாமி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அவருக்கும், விஷாலுக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தனது அடுத்த படத்தை லிங்குசாமி இயக்கயிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதனால் அந்த படத்திற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி.
இந்த நிலையில், லிங்குசாமி எழுதிய லிங்கூ-2 என்ற கவிதை தொகுப்பு மூன்று மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. முதலில் அவர் எழுதிய லிங்கூ என்ற கவிதை தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் லிங்கூ-2 என்ற லிங்குசாமியின் இன்னொரு கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. தமிழில் எழுதிய இந்த தொகுப்பினை தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட, மொழி பெயர்க்கும் பணிகள் நடக்கிறது.