ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கெளதம்மேனனின் காக்க காக்க படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த இன்னொரு படம் சிங்கம். காக்க காக்க படத்தைப்போலவே சிங்கம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் சூர்யா. அதேசமயம், ஹரி இயக்கிய படம் என்பதால் சிங்கத்தில் சூர்யாவின் கர்ஜனை அதிகமாகவே இருந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்ததை அடுத்து, சிங்கம்-2 படத்தையும் அதிரடியாக இயக்கினார் ஹரி. இந்த நிலையில் தற்போது, சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் எஸ்-3 என்ற பெயரில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் உலக அளவிலான சமூக விரோதிகளை வேட்டையாடும் கதையில் நடித்துள்ள சூர்யா, முதல் இரண்டு சிங்கம் படங்களை விடவும் கூடுதல் ஆர்வத்துடனும், ஆவேசத்துடனும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். உள்நாடு, வெளிநாடு என்று பல நாட்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக சொல்கிறார்கள். இன்னும் பேட்ஜ் ஒர்க் மட்டுமே பேலன்ஸ் இருக்கிறதாம்.
அந்த வகையில், இந்த படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் 100 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம். அதில் 4 பாடல்களில் நடித்தது தவிர மற்ற நாட்களில் எல்லாம் வில்லன்களை துரத்திக்கொண்ட திரியும் சேஸிங் மற்றும் சண்டை காட்சிகளாகத்தான் நடித்துள்ளாராம் சூர்யா.