ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ். அதையடுத்து கெளதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கிய அவர், தனது அடுத்த படத்தையும் தனுஷை வைத்தே இயக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தனது மூன்றாவது படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை ஐஸ்வர்யா தனுஷ். தனது தந்தை ரஜினியின் சுயசரிதையை எழுதத் தொடங்கி விட்டார். அதோடு, நேரம் வரும்போது அப்பாவின் வாழ்க்கை வரலாறை அவரை வைத்தே படம் இயக்குவேன் என்றும் கூறிவருகிறார்.
இந்த நிலையில், தென்னிந்தியாவின் பெண்கள் நல ஐ.நா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ், அடுத்தபடியாக தான் இயக்கும் படத்தை பெண்கள் சம்பந்தப்பட்ட கதையில் இயக்கப்போகிறாராம். நவீன பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த படம் உருவாகிறதாம். மேலும், ஜோதிகா, அமலாபால் மாதிரியான சில மாஜி ஹீரோயினிகளுக்கு அந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ்.