ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பைரவா படத்தில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டுடியோக்களில் செட் போட்டு நடந்தது வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பொதுமக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பு நடக்கயிருந்தபோது ஏராளமான ரசிகர்கள் கூடி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்ததை அடுத்து, இரண்டு முறை படப்பிடிப்பை கேன்சல் செய்தார் விஜய். அதையடுத்து அந்த காட்சிகளை செட் போட்டு படமாக்கினார் பரதன்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பாடல் காட்சியை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கியபோது, விஜய் நடனமாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, சில வெளிநபர்கள் எப்படியோ ஸ்டுடியோவுக்குள் சென்று செட்டுக்கு வெளியே நின்றபடி விஜய் நடனமாடுவதை பார்த்துள்ளனர். அப்போது அதை கவனித்து விட்ட விஜய், யாரோ வெளிநபர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். முதலில் அவர்களை வெளியேற்றுங்கள் என்று கூறினாராம். பின்னர் அந்த நபர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு நடனமாடியிருக்கிறார் விஜய்.
இதற்கு முக்கிய காரணம், படப்பிடிப்பில் நடப்பதை பார்க்கும் ரசிகர்கள், சில டேக்குகளை திரும்பத்திரும்ப படமாக்குவதைப் பார்த்து விட்டு, விஜய் அதிகப்படியான டேக் வாங்கினார் என தவறான செய்திகளை இணையதளங்களில் பரப்பி விடுகிறார்களாம். படப்பிடிப்பில் நடப்பது பற்றி எதுவும் தெரியாமல் அவர்களாக பரப்பி விடும் இந்த மாதிரி செய்திகளை தவிர்க்கவே இப்போது விஜய்யின் படப்பிடிப்பு தளங்களில் கெடுபிடி அதிகரித்துள்ளதாம்.