ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ். ஓய்வு நேரத்தில் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். எந்த மொழியில் நடித்தாலும் தனக்குப் பிடித்தமான படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தற்போது சில நேரங்களில் நடித்து முடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடிப்பில் வெளியான 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இப்படங்களின் வெற்றியில் பிரகாஷ்ராஜின் பங்களிப்புக்கும் முக்கிய பங்குண்டு.
இதை மனதில் வைத்து அடுத்து இயக்கும் படத்திலும் பிரகாஷ்ராஜுக்கு ஒரு முக்கிய கேரக்டர் வழங்கியுள்ளார் மோகன் ராஜா! மூன்றாவது முறையாக பிரகாஷ் ராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இது குறித்து ட்வீட்டரில் தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.