ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை லிஸியும், இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். காதல் வாழ்க்கை கசந்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தனர். சொத்துக்களையும் நீதிமன்றத்தின் மூலம் பிரித்துக் கொண்டனர்.
இவர்களது விவாகரத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் விவாகரத்தில் உறுதியாக இருப்பதை பதிவு செய்து கொண்டு அதற்கான பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டது. பின்னர் வழக்கின் தீர்ப்பை வருகிற 20ந் தேதி பிறப்பிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. 20ந் தேதி நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டால் மட்டுமே இருவருமே சட்டரீதியாக கணவன் மனைவி அல்ல என்று பொருள். ஆனால் அதற்குள் லிஸி நேற்று வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று "விட்டு விடுதலையாகிவிட்டேன்" என்ற அறிக்கை வெளியிட்டார்.