ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நில மோசடி புகார் தொடர்பாக, நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி உட்பட, ஐந்து பேருக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் இன்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நோட்டீசுக்கு உரிய விளக்கம் தரவில்லை என்றால், போலீசில் புகார் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோலி வுட் வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் சங்கத்திற்கு சொந்தமான, 26 சென்ட் நிலம், கூடுவாஞ்சேரி அருகில் வெங்கடபாக்கம் என்ற கிராமத்தில் இருந்நது. அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு, செல்வம், லதா ஆகிய இருவருக்கும், நடிகர் சங்கத்தின் சார்பில் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலம் விற்பனை தொடர்பாக, நடிகர் சங்கத்தின் பொதுக்குழு, செயற்குழு உட்பட எந்த ஒரு கூட்டத்திலும் ஒப்புதல் பெறவில்லை. எனவே, இந்த நில மோடி தொடர்பாக, அப்போதைய நடிகர் சங்க தலைவர், சரத்குமார், பொதுச்செயலர், ராதாரவி, பொருளாளர், கே.என்.காளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ் ஆகிய, ஐந்து பேரிடமும் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.
சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கோலிவுட் வட்டாரங்கள் தெரி வித்தன.