ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமந்தா நம்ம பல்லாவரத்து பொண்ணுதான் என்றாலும் தெலுங்கில் அழுத்தமாக காலூன்றிய பின்னரே தமிழுக்கு வந்தார். தற்போது இரண்டு மொழிகளிலும் பிசியான ஹீரோயினாக இருக்கும் இவர், சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்துடன் திருமணம் வரை இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். ஆனால் இப்போது எதிர்பாராத திருப்பமாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.. சமந்தாவின் முதல் தெலுங்கு பட ஹீரோ, நாகசைதன்யா தான் என்பது கவனிக்கத்தக்கது. தற்போது அதை திருமண நிகழ்வு வரை அழைத்து செல்ல பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டார்கள்.
ஏற்கனவே பிருந்தாவனம் என்கிற படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்த நடித்துள்ள சமந்தா, தற்போது அவருடன் 'ஜனதா கேரேஜ்' என்கிற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் புரமோஷனுக்காக சமந்தாவிடம் படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் பற்றி கேட்கப்பட்டது. இங்கேதான் சனி சடுகுடு ஆடத்தொடங்கியது..
“நான் இரண்டாவதாக நடித்த படமே ஜூனியர் என்.டி.ஆரின் 'பிருந்தாவனம்' தான். இத்தனைக்கும் அப்போது நான் ஒரு படம் மட்டுமே நடித்திருந்த நிலையில், அதுவும் நாகசைதன்யா போன்ற சிறிய நடிகருடன் (கவனிக்கவும்.. 'சிறிய நடிகருடன்') நடித்திருந்த நேரத்தில் அவர் படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது மிகவும் பயந்தேன்..” என மேலும் சில வாக்கியங்களை கூறி ஜூனியர் என்.டி.ஆரை வானளாவ புகழ்ந்துள்ளார் சமந்தா.
ஜூனியர் என்.டி.ஆரை என்னவேண்டுமானாலும் புகழ்ந்துவிட்டு போகட்டும். அதற்காக .நம்ம வீட்டு பையனை, அதுவும் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறவரை 'சின்ன ஹீரோ' என எப்படி மட்டம் தட்டலாம் என்று நாகார்ஜுனா அன் கோ செம கடுப்பில் இருக்கிறார்களாம்.