சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
'புலி' படத்தைத் தயாரித்த கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், அரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இருமுகன்'. இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோ, திருநங்கை வில்லன் என இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார். நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'இருமுகன்' படம் ரெடியாகி சில வாரங்களாகிவிட்ட நிலையில் கபாலி படத்துக்காக காத்திருந்தது.
இந்நிலையில், இருமுகன் படத்தை இந்தமாதம் வெளியிடும் எண்ணத்தில் தணிக்கைக்கு அனுப்பினார்கள். என்ன காரணத்தினாலோ பல நாட்கள் காத்திருக்க வைத்த தணிக்கைக்குழுவினர் இப்படத்தை நேற்றுதான் பார்த்தனர். எப்படியாவது இருமுகன் படத்துக்கு யு சான்றிதழ் வாங்கிவிட முயற்சி செய்தனர். தணிக்கைக்குழுவினர் மத்தியில் யு சான்றிதழ் வழங்க கடும் எதிர்ப்பு கிளம்பியதாம். எனவே, கடைசியில் இருமுகனுக்கு யு/ஏ சான்றிதழ் வாழங்கப்பட்டுள்ளது. கெமிக்கல் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான ‛இருமுகன்' படத்தை உலகமெங்கும் செப்டம்பர் 8-ஆம் தேதியே அதாவது, வியாழக்கிழமையே வெளியிட திட்டமிட்டுள்ளனர்.