ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரஜினியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் மீண்டும் ரஜினியின் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார்.
மெட்ராஸ் படத்தை இயக்கிவிட்டு சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். ஆனால், திடீரென ரஜினி தரப்பிலிருந்து அழைப்பு வரவே, பெருந்தன்மையாக பா.ரஞ்சித்தை, ரஜினிகாந்தின் படத்தை இயக்க அனுப்பி வைத்தார் சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா. கபாலி படமும் உருவாகி மாபெரும் ஹிட்டானது. இதுவரை சுமார் ரூ.300 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி, தற்போது ஷங்கர் இயக்கத்தில், எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2O-வில் நடித்து வருகிறார். ஏற்கனவே பாதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் ரஜினி, 2O-வில் பங்கேற்க இருக்கிறார்.
2O படத்திற்கு பிறகு ரஜினி எந்தமாதிரியான படத்தில் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச்சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஜினியின் அடுத்தப்படத்தை பா.ரஞ்சித்தை இயக்க இருப்பதாகவும், இப்படத்தை தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிப்பட அறிவித்துள்ளார்.
கபாலி படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைத்தது. இந்நிலையில் ரஜினியின் புதிய படத்தை மீண்டும் பா.ரஞ்சித்தே இயக்கவிருப்பதால் இப்படம் ‛கபாலி - 2 ஆக உருவாகுமா.? அல்லது வேறு ஒரு புதிய கதைக்களத்தில் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இப்பவே எகிற தொடங்கியுள்ளது.
மகிழ்ச்சி...!