ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எதையாவது புதுமையாக செய்தால்தான் சிறு படங்கள் மக்களை சென்று சேரும் என்பதுதான் இன்றைய நிலை. அதற்காக புதிய இயக்குனர்கள் புதிது புதிதாக எதையாவது செய்யத் துடிக்கிறார்கள். அந்த வரிசையில் குறும்பட இயக்குனர் ஏ.ஆர்.எஸ். சுந்தர் ஒரு படத்தை ஒரே அறைக்குள் படமாக்கி இருக்கிறார். படத்தின் பெயர் தாயம். சந்தோஷ் பிரதாப், அயிரா அகர்வால் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சதீஷ் இசை அமைத்துள்ளார், பாஹி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.எஸ் கூறியதாவது:
ஒரு அறைக்குள் நடக்கும் சம்பங்களை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். மொத்தமே 8 கேரக்டர்கள்தான். ஒரு அறைக்குள் அந்த 8 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக வந்து போகிற போது நடக்கும் சம்பங்கள்தான் கதை. ஒரே அறைக்குள் நடக்கும் கதை என்பதால் போரடித்துவிடக்கூடாது என்பதற்காக திரைக்கதையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறேன். இது புதிய முயற்சி என்பதை விட கதைக்கான களம் அப்படி என்றுதான் சொல்ல வேண்டும். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் துணை செய்திருக்கிறது" என்கிறார் சுந்தர்.