ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காஞ்சனாவில் தொடங்கிய பேய் சீசன் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தது. இப்போது பேய் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருவதைத் தொடர்ந்து அந்த சீசனும் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. அடுத்து விலங்கு சீசன் தொடங்கும் என்று தெரிகிறது.
சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விலங்கு படங்கள் அதிக அளவில் தயாராகிறது. சிபிராஜ் அடுத்து கட்டப்பாவ காணோம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஹீரோ ஒரு வாஸ்து மீன். அதன் பெயர்தான் கட்டப்பா. அடுத்து பிரபல விநியோகஸ்தர் வின்செண்ட் அடைக்கலராஜ் மியாவ் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் ஒரு பூனை ஹீரோ. தன்னை டார்ச்சர் செய்தவர்களை பழிவாங்கும் பூனையின் கதை. ஜெட்லி என்ற படத்தின் ஹீரோ ஒரு வெள்ளை பன்றிக்குட்டி. ஹாலிவுட் பாணியில் 3டி அனிமேஷனில் தயாராகிற படம்.
ஜூலியும் 4 பேர்களும் என்ற படம் ஒரு நாய்குட்டி சம்பந்தப்பட்டது. விலை உயர்ந்த நாயை 4 இளைஞர்கள் திருடுகிறார்கள். அந்த நாயோடு அவர்கள் நாய்படாதபாடு படுவதுதான் கதை. சீனி என்ற படத்தில் யானை நடிக்கிறது. காதலன் யானை பாகனாக வருகிறான். அவன் காதலுக்கு உதவுகிறது யானை. இதுதவிர இன்னும் சில படங்களும் விலங்குகளை மையமாக கொண்டு தயாராகி வருகிறது. இந்த படங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெற்றால் போதும் இனி விலங்குகள் படம் வரிசைகட்டும்.