ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பருத்தி வீரன் கார்த்தி படத்துக்குப்படம் மெருகேறிக்கொண்டே வருகிறார். ஆரம்பத்தில் ஆக்சன், காமெடி கலந்த கதைகளுக்கு முதலிடம் கொடுத்து வந்த அவர், தோழா படத்தில் பர்பாமென்ஸ் ரீதியாக பெரிய அளவில் கைதட்டல் பெற்றார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரான அந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்து தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டுள்ளார்.
அதையடுத்து கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான படம் காஷ்மோரா. இந்த படத்தை ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். முதன்முறையாக மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்துள்ள கார்த்தி, ஒரே சாயலில் இல்லாமல் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அதோடு, ஒவ்வொரு கேரக்டருக்கும் குரலை மாற்றி டப்பிங் பேசியிருக்கிறார். இந்த படத்திற்கான டப்பிங் பேசி முடித்துள்ள கார்த்தி, இப்படத்திற்கு ஒவ்வொரு கேரக்டரிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியது மட்டுமின்றி, குரலை மாத்தி பேசியதும் பெரிய சவாலாக இருந்தது என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.