கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிக்க வந்தவர்கள் அனைவரும் நாடகங்களில் இருந்து வந்தவர்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர், நம்பியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலரும் நாடகத்திலிருந்து வந்தார்கள். சிறுவயதிலேயே நாடக கம்பெனியில் சேர்ந்துவிடுவதால் இவர்கள் நிறைய படித்திருக்க மாட்டார்கள் எல்லாமே அனுபவம்தான். நடிப்பார்கள், பாடுவார்கள், கதை, வசனம் எழுதுவார்கள், இயக்குவார்கள்.
ஆனால் இதையெல்லாவற்றையும் தாண்டி சகல திறமைகளோடும் சகலகலா வல்லவனாக சினிமாவுக்கு வந்தவர் ரஞ்சன். 1941ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடித்த அசோக்குமார் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான ரஞ்சன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா படத்தின் மூலம் புகழ்பெற்றார்.
அதன் பிறகு நீலமலைத் திருடன், மங்கம்மா சபதம் படங்களில் நடித்தார். இது தவிர தமிழில் இருந்து இந்திக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவரும் ரஞ்சன் தான். ரஞ்சன் ஒரு விமான பைலட், 7 மொழிகள் பேசக்கூடியவர், ஓவியர், வாள் சண்டை கலைஞர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், குதிரை ரேஸ் வீரர், முறைப்படி நடனம் கற்றவர். இசை அமைப்பாளர், பாடகர் இப்படி பன்முக திறமையோடு சினிமாவுக்கு வந்த முதல் ஹீரோ ரஞ்சன் தான்.