ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் இதுவரை வாழ்த்து சொல்லாத நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கமலுக்கு தனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் இது தொடர்பாக அவர் கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பன்முக திறமையாளரான (சகலகலா வல்லவன்) தங்களுக்கு செவாலியே விருது கிடைத்துள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்திய சினிமாவை உலக அளவில் பேச வைத்த தங்களது முயற்சிக்கு கிடைத்த பலன்தான் இந்த விருது. இந்த விருதை உங்கள் ரசிகர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் சமர்பித்திருப்பது உங்கள் பணிவை காட்டுகிறது. இந்த விருதை பெற்றமைக்காக கேரள மக்களின் சார்பில் உங்களை மனதாரா பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.