ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமாவில் நடித்தபடியே அவ்வப்போது பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சமந்தா, அதையடுத்து சில தொண்டு நிறு வனங்களுடன் இணைந்து தான் சம்பாதிப்பதில் ஒரு தொகையை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். பின்னர் பிரதியுஷா என்ற அமைப்பை தொடங்கி சமீபகாலமாக பெரிய அளவில் சமூகசேவைகளை செய்து வருகிறார் சமந்தா.
இந்த நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த சாந்தினி என்ற 5 வயது பெண்ணுக்கு சாலை விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சமந்தாவின் பிரதியுஷா தொண்டு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டபோது, அந்த பெண்ணின் அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை தான் செய்வதாக முன்வந்துள்ளார் சமந்தா. அதையடுத்து அந்த சிறுமிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து தானும் நேரில் சென்று சிறுமி சாந்தினியை பார்த்து நலம் விசாரித்திருக்கிறார் சமந்தா.