ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எழில் முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கினார். ஆனாலும் தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது. அதன் பிறகு மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்காரதுரை என சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து வெற்றியடைந்தார்.
சின்ன பட்ஜெட்டில் அவர் படம் எடுக்க உதவியாக இருந்தது, அவரது ஊரிலேயே படப்பிடிப்பு நடத்தியதுதான். மயிலாடுதுறை அருகில் உள்ள ஏனங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த எழில், மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளைக்காரதுரை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் படப்பிடிப்பை தன் ஊர்ப்பக்கம்தான் வைத்துக் கொண்டார்.
இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பையும் தன்னுடைய ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்த உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய முன்தினம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து பரிவாரத்தை தன்னுடைய ஊர்ப்பக்கம் அழைத்துச் செல்ல இருக்கிறார் எழில்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக ரெஜினா காசண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். எழிலின் ஆஸ்தான காமெடி நடிகர் சூரியும் இதில் நடிக்கிறார். உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்தாலும் இப்படத்திற்கு இசையமைப்பது ஹாரிஸ் ஜெயராஜ் அல்ல, எழில் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்து வரும் டி.இமான் இசையமைக்கிறார்.