ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருப்பாச்சி படத்தில் பான்பராக் ரவியாக நடித்து புகழ்பெற்றவர் ஆர்யன். தற்போது பொட்டு, முத்துராமலிங்கம், காண்பது பொய் படங்களில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் வில்லன் கேரடக்ருக்கு என்னை போல் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறகு ஏன் வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்து வில்லன் நடிகர்களை அழைத்து வருகிறார்கள் என்று கேட்கிறார் ஆர்யன்.
அவர் மேலும் கூறியதாவது: நடிப்பு மீதுள்ள காதலில் நாடகங்களில் நடித்து வந்தேன். லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட் ப்ளே தியேட்டர்ஸில் நிறைய நடித்தேன்.அவற்றில் எட்டு திருடர்கள், ஜீசஸ் க்ரைஸ்ட் முக்கியமானவை ,பல முறை அரங்கேற்றப் பட்டவை. கஸ்தூரிராஜா சாரால் ட்ரீம்ஸ் படத்தில் அறிமுகமானேன். அதன் வெளியீடு தாமதப்பட்டது. அதில் வந்திருந்த படங்கள் மூலம் என் தோற்றத்தை, பார்த்து பேரரசு மூலம் திருப்பாச்சியில் பான்பராக் ரவி பாத்திரத்தில் அறிமுகமானேன்.
இன்று என்னை பான்பராக்ரவி என்கிறார்கள். ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். ஆனால் நான் ஏசு கிறிஸ்துவாக நடித்தவன். ஜீசஸ் க்ரைஸ்ட் என்கிற அந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் அச்சு அசலாக என் தோற்றம் ஏசு கிறிஸ்துவைப் போலவே இருப்பதாகக் கூறுவார்கள். திருப்பாச்சி க்குப் பிறகு ஆறு, ஆழ்வார்,சபரி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் ,அலெக்ஸ் பாண்டியன் சமீபத்தில் வந்த சந்தானத்தின் இனிமே இப்படித்தான் வரை இருபது படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் என்னை பான்பராக் ரவி என்றே கூப்பிடுகிறார்கள் என்றால் அதைத் தாண்டும் அளவுக்கு அடுத்த படம் பண்ணவில்லை என்றுதானே அர்த்தம்..? எனவேதான் அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.
கலைக்கு மொழி கிடையாதுதான். ஆனாலும் இங்கேயே ஆட்கள் இருக்கும் போது வெளியிலிருந்து அதுவும் வில்லன் நடிகர்களை அழைத்து வருவது வருத்தமாக இருக்கிறது இங்கே இலையென்றால் பரவாயில்லை, திறமையானவர்கள் பலர் இங்கேயே இருக்கும் போது இப்படிச் செய்யலாமா? வருத்தமாக இருக்கிறது. என்கிறார் ஆர்யன்.