ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும பொருட்டு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதையடுத்து, ஒரு மல்டி ஹீரோ கதையை தேர்ந்தெடுத்து அந்த படம் மூலம் கிடைக்கும் வசூலையும் கட்டிடம் கட்ட நிதியாக எடுத்துக்கொள் ளப்போவதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறி வருகிறார். இந்த நிலையில், அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் நாடகத்தை நடத்தி அதன்மூலமும் நிதி திரட்டப்போவதாக அடுத்தக்கட்ட முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
ஆனால், பொன்னியின் செல்வன் அனைவரையுமே கவர்ந்த நாடகம் என்பதால் இதில் தற்போதைய திரையுலகின் முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா? என்று விஷாலை நோக்கி கேள்விகள் எழுந்துள்ளன. அந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பொன்னியின் செல்வன் நாடகத்தில் கமல் சார் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. மற்றபடி, ரஜினி சார் நடிப்பது பற்றி தெரியவில்லை. அதோடு, நட்சத் திர கிரிக்கெட் போட்டியின்போது விஜய், அஜீத் இருவருமே ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆர்வத்துடன் கலந்து யார் யார் கலந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்..