கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
தெலுங்கு நடிகர் ராணா தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்தார். பாகுபலியில் வில்லான நடித்தார். ராணா நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணா நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கழுகு, சவாலே சமாளி, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கும் படத்தில்தான் ராணா நடிக்கிறார். தமிழில் மடை திறந்து என்ற தலைப்பிலும், தெலுங்கில் 1945 என்ற தலைப்பிலும் படம் தயாராகிறது. இது இரண்டு கால கட்டங்களில் நடிக்கிற கதை. கே புரொடக்ஷன் சார்பில் எஸ்.என்.ராஜன் தயாரிக்கிறார். ராணா ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், நாசர், கருணாஸ், ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. கடந்த வாரம் கன்னட நடிகர் சுதீப் முடிஞ்சா இவன புடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோவானது குறிப்பிடத்தக்கது.