ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஷாலினிக்குப் பிறகு குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் பெரிய ரவுண்டு வந்தவர் அவரது தங்கை ஷாம்லி. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த அஞ்சலி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் அவருக்கு தேசிய விருதினையும் பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகும் துர்கா உள்ளிட்ட பல படங்கள் அவரை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் கதாநாயகியாக நடிக்க என்ட்ரியானபோது, ஓரிரு படத்தோடு படிப்பை தொடர சென்று விட்ட ஷாம்லி, தனுஷ் நடித்துள்ள ‛கொடி' படத்தில் முதலில் கமிட்டாகியிருந்தார். ஆனால், பின்னர் அந்த படத்தில் திரிஷாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததால் அதிலிருந்து வெளியேறி விக்ரம் பிரபுவின் ‛வீரசிவாஜி' படத்தில் ஒப்பந்தமானார்.
ஆனால் அந்த படத்தில் நடித்து முடித்து விட்ட நிலையில், புதிய படங்கள் எதிர்பார்த்தபடி ஷாம்லிக்கு புக்காகவில்லை. தேடிச்சென்ற சில படங்களின் கதையைக்கேட்டவர் பிடிக்கவில்லை என்று ரிட்டன் பண்ணி விட்டாராம். மேலும் வீரசிவாஜி ரிலீசாகும்போது தனக்கும் பர்பாமென்ஸ் ஸ்கோப் உள்ள படங்கள் கிடைக்கும் என்று காத்திருக்கும் ஷாம்லி, ஏற்கனவே மலையாளத்தில் வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி -என்ற படத்தில் நடித்தவர் இப்போது சில மலையாள டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளாராம். மலையாளத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் அதிகமாக வருவதால் அடுத்தபடியாக -ஷாம்லியின் கவனம் மலையாள சினிமா பக்கம் திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள்.