ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாடகியாகவும், நடிகையாகவும் தமிழில் வலம் வரும் ஆண்ட்ரியா போன்று பஞ்சாபில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ருஹானி சர்மா. பஞ்சாபி படங்களில் பாடி வருகிறார், இசை ஆல்பங்களிலும் பாடியுள்ளார். 2013ம் ஆண்டு முதல் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ருஹானி சர்மா பரத் நடிக்கும் 'கடைசி பென்ஞ் கார்த்திக்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ரவி பார்கவன் இயக்கும் இந்தப் படத்தில் ருஹானி சர்மா கல்லூரி மாணவியாகவும், பரத் காதலியாகவும் நடிக்கிறார். படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறார். அவர் இன்னும் தேர்வாகவில்லை. தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து சென்னை, பெங்களூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
“தமிழ் இண்டஸ்ட்ரி பற்றி அதிகமாக தெரியாது. ஆனால் ரஜினி, கமல், மணிரத்னம் தெரியும். அவர்கள் படம் பார்த்திருக்கிறேன். இப்போது ஏ.ஆர்.முருகதாசையும் தெரியும். தமிழ் மக்கள் சினிமாவை பெஸ்டிவல் மாதிரி கொண்டாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஒரு மொழியில் அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் ருஹானி சர்மா.