ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எந்த ஒரு துறையிலும் திறமைதான் முக்கியம், திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். திரையுலகத்திற்கு அது ரொம்பவே முக்கியம். நடிகர் ஜீவாவிற்கு அப்பா பிரபலமான தயாரிப்பாளர் என்பதால் அப்பாவின் தயாரிப்பிலேயே நாயகனாக அறிமுகமானார். இருந்தாலும் அவருடைய முதலிரண்டு படங்களும் எந்த ஒரு கணக்கிலும் சேராமல் போனது. அவருடைய திறமையை ஓரளவிற்கு வெளிப்படுத்திய படம் 'ராம்'. அமீர் இயக்கிய அந்தப் படம் ஜீவாவுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
கடந்த 13 வருடங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் ஜீவா நடித்திருந்தாலும் அவர் பெயர் சொல்லும் படங்களாக சில படங்களே அமைந்தன. ''டிஷ்யும், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, நண்பன்,” ஆகிய படங்கள்தான் அவரை நினைத்துப் பார்க்க வைக்கும் படங்களாக அமைந்தன. பெயரும், வெற்றியும் அந்தப் படங்களின் போது கிடைத்தாலும் அதைத் தொடர்ந்து தக்க வைக்கத் தவறிவிட்டார் ஜீவா. கடைசியாக அவர் நடித்து வெளிவந்த 'யான், போக்கிரி ராஜா' படங்கள் அவரை அதிகமாகவே கீழே தள்ளிவிட்டன. இருந்தாலும் அந்தத் தோல்விகளிலிருந்து மீண்டு அடுத்தடுத்து மேலே எழ முயற்சி செய்து வருகிறார்.
அதில் அடுத்த படமாக ஆகஸ்ட் 5ம் தேதி 'திருநாள்' படம் வெளியாக உள்ளது. படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருப்பது கூடுதல் பலம். கிராமத்துக் கதை என்பதும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் படமாக இந்தப் படம் அமையும். படம் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆனாலும், படத்தை வெளியிடாமல் நல்ல இடைவெளிக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் திருநாள் ஆகஸ்ட் 5ம் தேதியாக அமைந்துள்ளது. இந்தத் 'திருநாள்' தரும் திருப்பம்தான் ஜீவாவை இனி 'கவலை வேண்டாம்' என இருக்கச் செய்யும்.