ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கௌதம் மேனன் கையை வைத்தால் அந்தப் படம் அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது என்ற பேச்சு திரையுலகில் ஒலிக்கிறது. சிம்புவை வைத்து ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். அந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே, அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் சிம்பு படத்தை கிடப்பில் போட்டார்.
என்னை அறிந்தால் படத்தை முடித்துவிட்டு வந்த பிறகு மீண்டும் சிம்பு படத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, தனுஷை பேட்டி எடுப்பதாக சொல்லி அவரை சந்தித்து, அவருடன் நட்பு வளர்த்து, அதே வேகத்தில் அவரிடம் ஒரு கதையையும் சொல்லி, கால்ஷீட்டையும் வாங்கினார்.
அதோடு, ஏற்கனவே தன்னுடைய பார்ட்னராக இருந்து, கௌதம் மேனன் என்னை ஏமாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டிவிட்டு பிரிந்து சென்ற எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனை சந்தித்து அவருடன் மீண்டும் ராசியானார். அதுமட்டுமல்ல, தனுஷை வைத்து இயக்க உள்ள படத்தை அவரையே தயாரிப்பாளராகவும் மாற்றினார். 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' என பெயரிடப்பட்ட அந்தப்படம் முடிவடைவதற்குள், அதை அப்படியே போட்டுவிட்டு அடுத்தப் படத்துக்குப் போய்விட்டார்.
மல்ட்டி ஸ்டார் படம் ஒன்றை கௌதம் மேனன் இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் மலையாளத்திலிருந்து ப்ருத்விராஜ், தெலுங்கிலிருந்து சாய் சரண்தேஜ், கன்னடத்திலிருந்து புனித் ராஜ்குமார், ஹீரோயின்களாக அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. தமிழுக்கான கதாநாயகன் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மல்ட்டி ஸ்டார் படத்தில் தமிழுக்கான கதாநாயகனாக ஜெயம் ரவி நடிக்க இருக்கிறாராம்.
கௌதம் மேனனுக்கு கால்ஷீட் கொடுக்கும் ஹீரோக்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது.