ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நான்ஈ படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் சுதீப். அதையடுத்து விஜய் நடித்த புலி படத்தில் நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி -என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதையடுத்தும் தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அதோடு, ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணசித்ரம் என எந்தமாதிரியான வேடம் கிடைத்தாலும் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும், தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டேன். அடுத்து அஜித்துடன் நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறும் சுதீப், மற்ற நடிகர் நடிகைகளை மதிக்கும் அஜித்தின் கேரக்டர் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. முக்கியமாக, ஒரு ஹீரோ இந்த மாதிரிதான் நடிக்க வேண்டும் என்கிற வட்டத்திற்குள் சிக்காமல், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து என்னை மட்டுமின்றி பெருவாரியான இந்திய நடிகர்களை கவர்ந்திருப்பவர் அஜித். அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது என்கிறார் சுதீப்.