ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
மதயானைக்கூட்டம், கிருமி போன்ற படங்களில் நடித்தவர் கதிர். தற்போது சிகை, என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சிகை படத்தில் ஒரு திரில்லர் கதையில் நடித்துள்ளார் கதிர். ஒரேநாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை காக்கா முட்டை மணிகண்டனிடத்தில் அசோசியேட்டாக ஒர்க் பண்ணிய ஜெகதீசன் சுப்பு இயக்கியிருக்கிறார்.
இந்த படம் குறித்து கதிர் கூறுகையில், இந்த சிகை படம் முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகியிருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் இந்த திரில்லர் படத்தில் நான் சில நிமிடங்கள் பெண் வேடத்திலும் நடித்துள்ளேன். அது கதையின் ஒரு முக்கிய டுவிஸ்டாக இருக்கும். அதோடு சமூகத்துக்கு நல்லதொரு மெசேஜ் சொல்லக்கூடியதாக இந்த படம் அமைந்திருக்கிறது என்று கூறும் கதிர், தற்போது இறுதிகட்ட பணிகள் நடக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் சிகை படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்.