ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளர்களில் ஈரோடு மகேசும் ஒருவர். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியான என்ட்ரியான இவர், பின்னர், விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்டார். அந்த வகையில், ஜோடி நம்பர் ஒன் சீசன்-8, நடுவுல கொஞ்சம் டிர்ஸ்டப் பண்ணுவோம், அட்ராசக்க உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நீதிபதிகளில் தானும் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
இப்படி பல டிவி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தபோதும், ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை, சிகரம் தொடு, சும்மா நச்சுன்னு இருக்கு போன்ற படங்களில் நடித் தவ ஈரோடு மகேஷ், இப்போது இணையதளம் என்ற படத்திலும் நடிக்கிறார். இதையடுத்தும் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் ஈரோடு மகேஷ்.
அதன்காரணமாக, ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அந்த ஹீரோக்களுடனான நட்பை அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து வரும் மகேஷ், அவர்களை அவ்வப்போது சந்திக்கவும் செய்கிறார். அதோடு அவர்கள் மூலமாக சில டைரக்டர்களுடன் நட்பு வளர்த்து புதிய படங்களுக்காகவும் முயற்சி செய்து வருகிறார். விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த்தைத் தொடர்ந்து அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பலரும் சினிமாவில் நடித்து வருவதைத் தொடர்ந்து ஈரோடு மகேசுக்கும், சின்னத்திரையைப் போன்று சினிமாவிலும் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், ஹீரோக்களுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக நடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்.