ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் தயாரிக்கப்பட்டபோது, இந்தியாவிலேயே பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படம் என்று சொல்லப்பட்டது. பின்னர் பாகுபாலி, ஷாருக்கான் நடித்த ரா ஒன் போன்ற படங்கள் தயாரிப்புநிலையில் இருந்தபோது இந்திய சினிமாக்களில் இதுதான் அதிக பொருட்செலவில் தயாரான படம் என்று சொல்லப்பட்டது. அதேபோல் தற்போது உருவாகிவரும் 'எந்திரன் 2', 'பாகுபலி 2' படங்களையும் அதிக பொருட்செலவில் உருவாகிவருவதாக சொல்கிறார்கள்.
இந்நிலையில், இந்தப் படங்கள் அனைத்தையும் மிஞ்சுகிற வகையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுந்தர்.சி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக தயாராகும் இப்படத்துக்கு 'சங்கமித்ரா' என பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் 'சங்கமித்ரா'வில் கதாநாயகனாக நடிப்பதற்காக சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் படத்தில் மற்றொரு முன்னணி ஹீரோ நடிப்பதால் சூர்யா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவாளராகவும், சாபுசிரில் கலைஇயக்குநராகவும், கனல்கண்ணன் சண்டைஇயக்குநராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் முடிவடைந்து தற்போது ப்ரீ புரடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.
'சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பை இந்தியா, அமெரிக்கா, டென்மார்க், உக்ரைன், இரான் உட்பட உலகம் முழுவதும் 11 நாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.