ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் திரைப்பட நட்சத்திரங்களில் வித்தியாசமான தோற்றம் கொண்டவர் காக்கா ராதாகிருஷ்ணன். சிவாஜியின் பள்ளித் தோழர். இருவரும் சேர்ந்துதான் திருட்டு நாடகம் பார்த்து, பின்பு நாடக கம்பெனிகளில் சேர்ந்து ஒரே நேரத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். உருண்ட பெரிய கண்கள், குட்டையான உருவம். கெந்தி கெந்தி நடக்கிற நடை இதை வைத்துக் கொண்டு 50 ஆண்டுகள் சினிமாவில் ஜெயித்தார் காக்கா ராதா கிருஷ்ணன். ராதாகிருஷ்ணன் பெயருக்கு முன்னால் காக்கா வந்த கதை சுவாரஸ்யமானது...
என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் ஜோடியாக நடித்த படம் மங்கையர்கரசி. இதில் இந்த தம்பதிகளின் மகனாக நடித்தார் ராதாகிருஷ்ணன். கொஞ்சம் புத்தி குறைவான மகன். எதையாவாது சொன்னால் அதனை வேறு கோணத்தில் புரிந்து கொள்ளக்கூடியவர். “சோடாவை உடைச்சு கொடு” என்றால் சோடா பாட்டிலை சுக்குநூறாக உடைத்து கொடுப்பார்.
அப்படிப்பட்டவரிடம் ஒரு நாள் மதுரம் “டேய் நீ அப்பா மாதிரியே எல்லோரையும் காக்கா புடிச்சாவது வேலை தேடிக்கணும்” என்பார். காக்கா புடிச்சி என்றால் அவர்களை புகழ்ந்து பேசி என்ற பொருள். ஆனால் இதனை தவறாக புரிந்து கொள்ளும் ராதாகிருஷ்ணன், ஒரு நிஜ காக்காவையே கையில் பிடித்துக் கெண்டு “எங்கம்மா காக்கா புடிச்சி உங்க கிட்ட வேலை கேட்க சொன்னாங்க” என்று போய் நிற்பார். இந்த காமெடி காட்சி அப்போது கவுண்டமணி-செந்திலின் வாழைப்பழம் காமெடி அளவிற்கு பேமஸ். அன்று முதல் ராதாகிருஷ்ணன் பெயருக்கு முன்னால் காக்கா ஒட்டிக்கொள்ள, காக்கா ராதாகிருஷ்ணன் ஆனார்.