ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இப்போதெல்லாம் ஆண்டுக்கு 50 டப்பிங் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஜாக்சிசானும், ஜேம்ஸ் பாண்டும்கூட டப்பிங் பேசுகிறார்கள். இந்த டப்பிங் படத்தை தமிழில் தொடங்கி வைத்தவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். படம் 'ஹரிச்சந்திரா'. தொழில்போட்டியில்தான் டப்பிங் படம் தமிழுக்கு வந்தது. அந்த விபரம் வருமாறு:
1944ம் ஆண்டு கன்னடத்தில் ஹரிச்சந்திரா என்ற படம் வெளியானது. ஆர்.ராகவேந்திராவ் இயக்கினார். நாகேந்திரராவ், கமலா நடித்திருந்தனர். இந்த படத்தால் கவரப்பட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார். கன்னட 'ஹரிசந்திரா'வை தமிழில் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்குள் பி.யூ.சின்னப்பா கண்ணாம்பாள் நடிப்பில் தமிழில் 'ஹரிச்சந்திரா' படத்தை ஆரம்பித்து விட்டார் இயக்குனர் நாகபூஷணம். இது ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அப்போது ஹாலிவுட்டில் பிரஞ்சு மொழி படங்களை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்ட செட்டியார் ஒரு வேலை செய்தார்.
தமிழ் 'ஹரிச்சந்திரா' தயாரிப்பில் இருந்தபோதே கன்னட 'ஹரிச்சந்திரா'வை ரகசியமாக தமிழில் டப் செய்தார். அவரது பிரகதி ஸ்டூடியோவில் பரம ரகசியமாக இதனைச் செய்தார். ஒலிப்பதிவாளர் சீனிவாசராகவனும், வசனகர்த்தா ஏ.டி.கிருஷ்ணசாமியும் இணைந்து டப் செய்தார்கள். தமிழ் 'ஹரிச்சந்திரா' வெளிவருதற்கு முன்பே கன்னட டப்பிங் 'ஹரிச்சந்திராவை' வெளியிட்டார் ஏவி.மெய்யப்ப செட்டியார். படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு வெளிவந்த தமிழ் 'ஹரிச்சந்திரா' தோல்வி அடைந்தது. தமிழின் முதல் டப்பிங் படம் என்ற பெயரை 'கன்னட ஹரிச்சந்திரா' பெற்றது.