ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னை : அமெரிக்காவில் ஓய்வெடுத்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய கபாலி திரைப்படத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில், அவர் அமெரிக்கா சென்று ஓய்வு எடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் சென்றிருந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு என்ற வதந்திகளும் வலம் வந்தன. கடந்த 22ம் தேதி வெளியான கபாலி திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வசூலையும் குவித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று(24-07-16) இரவு 7.30 மணியளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை தவிர்த்த அவர், ரசிகர்களை மட்டும் வணங்கிவிட்டு தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.