ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் கடந்த 22ந் தேதி வெளிவந்தது. கர்நாடக மாநிலத்தில் சுமார் 300 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் கபாலி படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி, கன்னட வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டங்களுக்கு வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் “கர்நாடகத்திற்கு துரோகம் செய்யும் ரஜினி ஒழிக” என்ற கோஷத்தை எழுப்பினர். அதோடு ரஜினி உருவபொம்மை, மற்றும், கபாலி பட போஸ்டர்களை தீயிட்டு கொழுத்தினர். இதனை போலீசார் வேடிக்கை பார்த்தனர்.
போராட்டம் குறித்து வாட்டாள் நாகராஜ் கூறும்போது: ரஜினி கர்நாடகாவில் பிறந்தாலும் அவர் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கன்னடர்களுக்கு எதிரானவராகவும் இருக்கிறார். காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டை ஆதரிக்கிறார். 300 தியேட்டர்களில் 'கபாலி' படம் வெளியிடப்படுவதன் மூலம் கன்னட படங்கள் நசுக்கப்படுகிறது. கன்னட சினிமாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதற்காகவே போராட்டம் நடத்துகிறோம். என்றார்.