மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
ஜீவா அதிகமாக எதிர்பார்த்த யான், போக்கிரி ராஜா படங்கள் அவரை பெரிதாக ஏமாற்றி விட்டன. இதில் போக்கிரிராஜா படம் அந்த படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ்க்கு சாதகமாகி விட்டது. அதனால் உடனடியாக தனக்கொரு ஹிட் கட்டாயம் தேவை என்பதால் திருநாள், கவலை வேண்டாம் படங்களில் முழுவீச்சில் இறங்கினார் ஜீவா. அதோடு, மார்க்கெட் இல்லாத நடிகைகள் தன்னுடன் நடித்தால் அதுவே பாதகமாகி விடும் என்று மார்க்கெட்டில் இருக்கும் நயன்தாராவை திருநாள் படத்திலும், காஜல்அகர்வாலை கவலை வேண்டாம் படத்திலும் கூட்டணி சேர்த்துக்கொண்டார்.
அந்த வகையில், ஜீவா பெரிய நம்பிக்கை வைத்து நடித்து வந்த இந்த இரண்டு படங்களுமே தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதில், நயன்தாராவுடன் இணைந்து நடித்த திருநாள் படம் ஆகஸ்ட் மாதமும், கவலை வேண்டாம் படம் செப்டம்பர் மாதமும் திரைக்கு வருகிறதாம். மேலும், சமீபகாலமாக நயன்தாரா நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருவதால், அந்த வரிசையில் திருநாள் படமும் இடம் பிடிக்கும் என்று பெரிய நம்பிக்கை வைத்துள்ள ஜீவா, இந்தபடத்தை சரியான தியேட்டர்களில் வெளியிட்டு எப்படியும் படத்தை ஹிட் பண்ணி விடவேண்டும் என்று அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறார்.