ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் எல்லா வகையிலும் பல சாதனைகளையும், பல புதுமைகளையும். பல ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தியேட்டரில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றம். அந்த குற்றத்தை செய்வதற்காக பெரம்பலூர் தியேட்டர்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாகவே அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதாவது திருடுவதற்கு போலீசிடம் அனுமதி கேட்பதைப்போல. “கூடுதல் விலை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறோம் போட்ட பணத்தை எடுக்க டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்க அனுமதிக்க வேண்டும்” என்று அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.
அரசு அதிகாரிகள் உறுதியாக அதற்கு அனுமதி மறுத்ததோடு மீறி விற்றால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் நேற்று பெரம்பலூரில் கபாலியை திரையிடவில்லை. இதனால் கட்அவுட், பாலாபிஷேகம் தோரணம் என்று உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் திரும்பினார்கள். இப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்திருப்பது இதுவே முதல்முறை.