ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வின்சென்ட் செல்வா இயக்கிய ஜித்தன் படத்தில் அறிமுகமானவர் ரமேஷ். இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன் ஆவார். இவர் நடித்த ஜித்தன் படம் வெற்றி பெறவே அதன்பிறகு பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால், தந்தை தயாரித்து வந்த படவேலைகளில் கவனத்தை திருப்பினார் ஜித்தன் ரமேஷ். இருப்பினும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையே மனதளவில் இருந்து வந்ததால், மீண்டும் ஒரு முயற்சி எடுத்து பார்ப்போம் என்று ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை.
விளைவு, ஜித்தன்-2வில் நடித்தபோது அவர் கமிட்டாகி நடித்து வந்த இன்னொரு படமும் இப்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் புதிய படங்களுக்காக காத்திருக்க விரும்பாத ஜித்தன் ரமேஷ், தற்போது தங்களது சூப்பர் குட் பிலிம்ஸ், ஆர்யாவை வைத்து தயாரித்து வரும் கடம்பன் படத்தின் தயாரிப்பு வேலைகளில் முழுவீச்சில் இறங்கி விட்டார். இப்போது யாராவது புதுமுக டைரக்டர்கள் கதை சொல்கிறேன் என்று அவரை தேடிச்சென்றாலும் அந்த கதையை கேட்க அவர் தயாராகவில்லை. மீண்டும் நடிக்கிற மாதிரி இருந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்று அவர்களை திருப்பி விட்டு வருகிறார்.