ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வெளிவரும்போது பெங்களூருவில் உள்ள அவரது ரசிகர்கள் ரஜினி கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். இதனை எதிர்த்து பெங்களூரைவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பெங்களூர் மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளிவரும்போதெல்லாம் ரசிகர்கள் அவரது கட்அவுட்டுக்கு ஆயிரக்கணக்கான லிட்டரில் பாலாபிஷேகம் செய்கிறார்கள். குழந்தைகளும், முதியவர்களும் குடிக்க பாலின்றி அலையும் சூழ்நிலையில் இதுபோன்ற பாலாபிஷேகங்களில் பால் வீணாக்கப்படுவதை தடுக்க கட்அவுட் பலாபிஷேகத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக ரஜனி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததது ரஜினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர். “ரஜினி உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. அவர் வந்ததும் தாக்கல் செய்கிறோம் என்று கூறினார். இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் மாதம் 17ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.