ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
பல வருடங்களாக திரைப்படத்துறையில் பைனான்சியராக இருப்பவர் சந்திரபிரகாஷ் ஜெயின். சுமார் 15 வருடங்களுக்கு முன்புவரை இவரும் இவரது சகோதரர் செயின்ராஜ் ஜெயின் இருவரும்தான் தமிழ்சினிமாவின் முன்னணி பைனான்சியர்கள். டி.ராஜேந்தர் உட்பட பலரும் இவர்களிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்தார்கள். அப்போதெல்லாம் தமிழ்சினிமாவே இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
மதுரை அன்புவின் வருகைக்குப் பிறகு தயாரிப்பாளர்கள் மதுரைக்கு படை எடுக்கத் தொடங்க, படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் பிசினஸ் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு டல்லடித்தது. எனவே, ஏற்கனவே சம்பாதித்த பணத்தை வைத்து 2013ல் விஜய்யை வைத்து தலைவா படத்தைத் தயாரித்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கிய சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு தலைவா படத்தினால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவர், தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்க ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். தில்லுக்கு துட்டு படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலர் பார்த்துவிட்டு இந்தப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் தில்லுக்கு துட்டு படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார் சந்திர பிரகாஷ் ஜெயின்.