ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மகாபிரபு, பகவதி, குத்து, ஏய், வாடா, சண்டமாருதம் என பல ஆக்சன் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தற்போது சொந்த படம் என்றொரு காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். அதோடு நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஏ.வெங்கடேஷ். அங்காடித்தெரு படத்தில் வில்லனாக நடித்த அவர், அதன்பிறகு சட்டப்படி குற்றம், பாகன், இரவும் பகலும், சிவப்பு, கோலிசோடா என பல படங்களில் நடித்தவர் தற்போது பகிரி என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
ஆனால் இதற்கு முன்பு நெகடீவ் ரோல்களிலேயே அதிகமாக நடித்துள்ள ஏ.வெங்கடேஷ், இந்த படத்தில் காமெடியனாக நடித்துள்ளாராம். இதே படத்தில் அவரிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் நடிகரான ரவிமரியாவும் ஒரு வேடத்தில் நடித்துள்ளாராம். அதனால் ரவிமரியாவை விட நன்றாக தான் நடித்து விடவேண்டும் என்கிற போட்டி மனநிலையுடன் நடித்தாராம் வெங்க டேஷ்.
இதுபற்றி நடிகர் ரவிமரியா கூறுகையில், ஏ.வெங்கடேஷ்க்கும், எனக்குமிடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. நான் சில படங்களில் நடித்ததைப்பார்த்து விட்டு எனக்கு போன் செய்து பாராட்டுவார். அதேசமயம், நன்றாக நடித்து விட வேண்டும் என்கிற ஆரோக்யமான போட்டியும் இந்த படத்தில் எங்களுக்கிடையே இருந்தது. அதனால் ஒரு காட்சியில் நான் நடித்தால் அதை மறைந்திருந்த பார்த்து விட்டு பின்னர், அவர் நடிக்கும்போது என்னைவிட நன்றாக நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்ததை நானும் ரசித்தேன். அவர் வித்தியாசமான கோணத்தில் நடை நடந்தபடி நடித்தது சிறப்பாக இருந்தது என்கிறார்.